நான் நீண்டகாலமாக இடைக்கிடையே சமூக, அரசியல் பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பாக தமிழ் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எனது இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து எழுதி வந்துள்ளேன். அப்படி எழுதப்பட்ட எல்லா ஆக்கங்களும் என் கைவசம் இல்லை. அவற்றில் சமகால அறிவுரீதியான தேடல்களுக்கும் விவாதங்களுக்கும் பயன்படக்கூடிய சிலவற்றையாயினும் தேர்ந்தெடுத்து மீள்பிரசுரிக்க வேண்டும் எனப் பல தோழர்களும் நண்பர்களும் கடந்த சில வருடங்களாக எனக்குப் பல தடைவைகள் அன்புடன் ஆலோசனை வழங்கி வந்தனர். சிலர் ஆலோசனைக்கும் அப்பால் சென்று உதவவும் முன்வந்தனர். ஏறிச்செல்லும் என் வயதையும் அது தரும் உடல்நலப் பிரச்சனைகளையும் நினைவூட்டியபடி ‘இதைக் கெதியாய்ச் செய்யவேணும்’ எனச் சற்றே அழுத்திக் கூறிய வண்ணமிருந்தனர் சில அன்பர்கள். அது மட்டுமல்லாமல் சமகால விடயங்கள் பற்றி அங்குமிங்கும் உரைகள் நிகழ்த்துவதோடு நின்றுவிடாமல் அவற்றை எழுத்திலும் போடவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இவற்றின் ஒரு விளைவாகப் பிறந்தது தான் இந்த இணையத் தளம். பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி எழுதிய சில ஆக்கங்கள் சேர்க்கபபட்டுள்ளன, மேலும் சில சேர்க்கப்படும். சமகால விடயங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன். ஆக்கங்கள் பற்றி கருத்துரீதியான அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும்.
நட்புடன்
சமுத்திரன்
nsh3006@gmail.com
- நடிகர் ஒன்றியம் அளித்த வித்தியாசம் கலந்த விருந்து
- துருவச்சுவடுகள்
- மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும்
- ‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ எம். வாமதேவனின் பயணம்
- இலங்கை தேசிய இனப் பிரச்சனை ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு – சில குறிப்புகள்
- தேசிய இனப் பிரச்சனையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்
- கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்
- பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம்புரளலும்
- காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ பற்றி ஒரு பார்வை: II
- காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ பற்றி ஒரு பார்வை:I
- மேதின வாழ்த்துக்கள்!
- ‘வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு’ ஆய்வறிக்கை பற்றிய விமர்சனக் கருத்துரை
- அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018
- அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்
- Marx200 கார்ல் மாக்ஸ் 200 முதலாளித்துவம் தொடரும்வரை மாக்சியத்தின் பயன்பாடும் தொடரும்
- இலங்கையில் மேதினத்தை இடம்பெயர்த்த வெசாக்
- மாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்
- அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு
- தேசியக் கொடியும் தேசிய இனப்பிரச்சனையும் – குறியீடுகளும் யதார்த்தங்களும்
- மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – V
- ஒக்டோபர் 1917 ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்
- மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – IV
- மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் -III
- மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – II
- மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – I
- இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்
- கடன் ஏகாதிபத்தியம் – கடன் வாங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு
- உள்நாட்டு யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல்
- நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா? 1989 ஜூனில் யாழ்ப்பாணத்தில் கவிஞர் சேரனுடன் இடம்பெற்ற ஒரு உரையாடல்
- மேதின வாழ்த்துக்கள்!
- May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்
- இலங்கையில் மேதினங்கள்
- வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்
- தோழர் விசுவானந்ததேவன் – ஓர் அரசியல் உறவு பற்றிய மீள்சிந்திப்பு
- அபிவிருத்தி – மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?
- ஏ. ஜே – ஒரு விவாதம் தந்த உறவு
- எழுந்து வரும் நவ லிபரலிச அலைகள் – இவை நிலைகொள்ளுமா ?[1]
- நவதாராள உலகமயமாக்கலும் மூலதனத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகளும் [1]
- செல்வந்த நாடுகளின் ஏறிச்செல்லும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகத்தின் சிதைவும்- முதலாளித்துவம் மீட்சியின்றி சீரழிகிறதா ?
- இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா
- புலம்பெயர் தமிழிலக்கியத்தின் எதிர்காலம் பற்றி சில கேள்விகள்
- ஈழத்தமிழர் போராட்டத்தில் புலம்பெயர் எழுத்தாளரின் பங்கு
- சபாலிங்கம் – காலந்தாழ்த்திய ஒரு அஞ்சலி
- தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு ‘ நாவல் பற்றிய ஒரு விமர்சனம்